Thursday, July 12, 2012

உலக வாத்தியான் ஜவஹிரும் நம்ப முடியாத புளுகு மூட்டையும் :


“பா.ஜ.க.வுடன் கைகோர்த்த ம.ம.கட்சி” என்ற தலைப்பில், மானம் கெட்ட வாத்தியார், சங்பரிவாரத் தலைவர் இல.கணேசனுடன் கைகோர்த்து போஸ் கொடுத்து நின்ற செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தோம்.
சட்டமன்றத்தில் ஜனாஸாவாக வீற்றிருக்கும் ம.ம.கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பி.ஜே.பி.யின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் கை கோர்த்துக் கொண்டு உற்சாகமாக போஸ் கொடுத்து நின்றது ஏன்? என்பதற்கு அற்புதமான(?) விளக்கத்தை அளித்துள்ளார்.
ம.ம.கட்சி தொண்டர்களே இந்த விஷயத்தில் அவரைக் காரித்துப்பி கேள்வி கேட்டவுடன் செய்வதறியாது விழிபிதுங்கிய சட்டமன்ற ஜனாஸா, வேறுவழியின்றி தனது அந்த மானங்கெட்ட செயலை நியாயப்படுத்தி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த மய்யித்து அறிக்கை குறித்து இங்கே அலசுவோம்.

இதுவரைக்கும் இவர், “அகில உலக ஜால்ரா மன்னன்” என்ற பட்டம் பெறுவதற்குத்தான் முயற்சி செய்து வருகின்றார் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். இவரது இந்த அறிக்கையைப் பார்த்தபிறகுதான், “அகில உலக புளுகு மன்னன்” என்ற பட்டமும் தனக்கே வர வேண்டும் என்று இவர் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளார் என்பது நமக்குத் தெரியவந்துள்ளது.
புளுகு மன்னனின் புளுகு 1 :
மாமல்லபுரத்தில் ஏற்கெனவே இந்திய தொல்லியல் துறை (Archeological Survey of India) வழிபாடு இல்லாத 32 பழங்கால கோயில்கள் மற்றும் புராதான இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் முன்பே கொண்டு வந்தது. தற்போது புதிய சட்டத்தின் கீழ் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பிறகு 14ம் நூற்றாண்டில் புணரமைக்கப்பட்டு மக்கள் வழிபாட்டில் இருக்கும் தலசயானப் பெருமாள் கோயிலும் புராதானச் சின்னம் என தொல்லியல் துறை அறிவித்தது. இதன் காரணமாக ஹிந்துப்பெருங்குடி மக்களின் வழிப்பாட்டு உரிமை பறிக்கப்பட்டதுடன் இந்தக் கோயிலைச் சுற்றி 300 மீட்டர் அளவிற்கு வாழும் அனைத்து சமூக மக்களின் வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொல்லியல் துறை எடுத்துள்ள 32 இடங்கள் மற்றும் கடைசியாக எடுத்த தலசயானப் பெருமாள் கோயிலும் புராதானச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாமல்லபுரத்தில் எவ்வித கட்டுமானப் பணியோ அல்லது புனரமைப்புப் பணியோ அல்லது ஒரு மின்விசிறியை மாற்றி மாட்டும் பணியோ முடங்கிப் போகும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரத்தில் வாழும் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் வியாபாரிகள் உட்பட அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது. இப்படி தொல்லியல் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் வாழும் மாமல்லபுரத்தை மயான பூமியாக மாற்ற இந்திய தொல்லியியல் துறை திட்டமிட்டத்தைக் கண்டித்துத் தான் பல்வேறு போராட்டங்களின் ஒரு பகுதியாக கடந்த ஜுன் 28 அன்று தொடர் முழக்கப் போராட்டத்திற்கு மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன” என்று முதலில் தான் ஏன் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றேன் என்பதற்கு காரணத்தைச் சொல்லுகின்றார் வாத்தியார்.
சுருங்கச் சொல்வதாக இருந்தால், மாமல்லபுரத்திலுள்ள முஸ்லிம்களும் தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்களாம். அதனால் தான் முஸ்லிம்கள் நலம் நாடி இந்த போராட்டத்தில் சங்பரிவாரக் கும்பலோடு கைகோர்த்ததாக சொல்லுகின்றார் புளுகு மன்னன்.
இவர் சொல்லும் காரணம் சரியானது தானா? இவர் கூறுவது உண்மையா? என்பதை நாம் இப்போது ஆய்வு செய்வோம்.
அதாவது தொல்லியல்துறை இந்தக் கோவிலை கையில் எடுத்தால் மாமல்லபுரத்தில் வாழும் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் வாத்தியார் வைக்கும் வாதம். இந்த வாதம் முற்றிலும் பொய்யானது என்பதை அவரை அறியாமலேயே அவரது அறிக்கையிலேயே ஒப்புக் கொண்டு தான் ஒரு புளுகு மன்னன் என்பதை தனது அறிக்கையின் வாயிலாக நிரூபித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில், மாமல்லபுரத்தில் ஏற்கெனவே இந்திய தொல்லியல் துறை (Archeological Survey of India) வழிபாடு இல்லாத 32 பழங்கால கோயில்கள் மற்றும் புராதான இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் முன்பே கொண்டு வந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது ஏற்கனவே மாமல்லபுரத்திலுள்ள 32 கோவில்களையும், பழங்கால கட்டடங்களையும் தொல்லியல்துறை கையில் எடுத்துள்ளதால் வாத்தியாரின் கூற்றுப்படி அங்கு அதைச் சுற்றியுள்ள 300மீட்டர் தூரம் அளவுக்கு எந்த முஸ்லிமுடைய வீட்டிலும் மின்விசிறி கூட மாற்ற முடியாத நிலை இதற்கு முன்பே இருந்து வருகின்றது. அப்படியானால் தற்போது தலசயன பெருமாள் கோவிலை தொல்லியல் துறை கையில் எடுத்தால் என்னென்ன புதிய சட்ட திட்டங்கள் போடுவார்களோ, அந்தப் புதிய வரையறைகள் எல்லாம் ஏற்கனவே மாமல்லபுரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது இந்த தலசயன பெருமாள் கோவிலை தொல்லியல்துறை கையில் எடுப்பதால் புதிதாக எந்த முஸ்லிமும் பாதிக்கப்படப் போவதில்லை என்ற உண்மை வாத்தியாரின் அறிக்கையிலிருந்தே வெளிப்படுகின்றது.
பி.ஜே.பி. தலைவர் இல.கணேசனுடன் வாத்தியார் கைகோர்த்த கேவலத்தை ஏதாவது காரணம் சொல்லி நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளார் என்பது இதன் வாயிலாக வெட்டவெளிச்சமாகின்றதா? இல்லையா?
ஏற்கனவே 32 கோவில்களை கையகப்படுத்தியபோது எந்த முஸ்லிமும் கொதித்தெழவில்லை. எந்த முஸ்லிம் அமைப்புகளும் போராட்டம் நடத்தவில்லை. தற்போது இந்தப் போராட்டத்தை அறிவித்தவர்களும் முஸ்லிம்கள் இதில் பாதிக்கப்படுகின்றார்கள் என்று சொல்லவில்லை. அப்படியிருக்கையில் தான் செய்த ஈனச் செயலை நியாயப்படுத்தத்தான் வாத்தியார் இந்த சப்பைக்கட்டு பதிலை யோசித்து தயார் செய்துள்ளார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதனால் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் தடைபட்டு விடும் என்பதும்தான் பிரதானப் பிரச்சனையே ஒழிய இதில் முஸ்லிம்களை இழுப்பது வாத்தியாரின் திட்டமிட்ட புளுகு வேலை என்பது இதன் மூலம் அம்பலமாகின்றது.
புளுகு மன்னனின் புளுகு 2:
இச்சட்டத்தின் கீழ் தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந் துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை யும் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் தொல்லியல் துறையின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும், மத்திய அரசு இச்சட்டத்தை கைவிட வேண்டும் என்று பேசினேன்” என்று அடுத்து ஒரு புளுகை அவிழ்த்துவிட்டுள்ளார் வாத்தியார்.
இவருக்கு அம்மா பாசம் அதிகம். அதனால்தான் அம்மாவின் அலுவலகத்தில் ஒரு ஆணி அடிப்பதாக இருந்தால் கூட தொல்லியல்துறையிடம் கேட்க வேண்டும் என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதைப்பற்றி அம்மா(?) அவர்களே கவலைப்படவில்லை. இந்தப் பிள்ளை(?) ஏன் கவலைப்படுகின்றது என்று தெரியவில்லை. இதிலும் பச்சைப் பொய்யை இவர் புளுகியுள்ளார் என்பது தெளிவாகின்றது.
அதாவது ஜார்ஜ் கோட்டையான தலைமைச்செயலகத்தை தொல்லியல்துறை கையகப்படுத்தியுள்ளது என்றால் அதிலிருந்து 100மீட்டர் தொலைவுக்கு உள்ள பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதா? அந்த 100மீட்டர் தொலைவிற்குள் எந்த ஈ காக்காயும் போவதில்லையா?
மேலும், தலைமைச்செயலகத்திலிருந்து 300மீட்டர் தொலைவிற்குள் உள்ள எந்த கட்டடத்திலும் ஆணி அடிக்கப்படுவதில்லையா? மின்விசிறி மாற்றப்படுவதில்லையா? கட்டுமானங்கள் நடைபெறுவதில்லையா? என்ற கேள்விக்கு வாத்தியார் பதிலளிக்க வேண்டும்.
மேற்கண்ட வேலைகள் எல்லாம் தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இவர் ஓர் உலக மகா புளுகு மன்னன் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகின்றது.
தான் செய்த ஈனச் செயலை நியாயப்படுத்த எத்தகைய பொய்யையும் இவர் அவிழ்த்து விடுவார் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
மாமல்லபுரத்தில் உள்ள பள்ளிவாசல் பாதிக்கப்படுமாம்:
அடுத்ததாக, நான் பேசிய மேடையில் மாமல்லபுரம் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவரும் இருந்தார். பேசி முடித்த பிறகு மக்ரிப் தொழுகைக்காக மாமல்லபுரம் பள்ளிவாசலுக்கு அவருடன்தான் சென்றேன். இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிதாக கட்டப்பட்டுள்ள அந்த பள்ளிவாசலும் பாதிக்கப்படும் நிலை உள்ளதை என்னால் அறிய முடிந்தது” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு தான் செய்த ஈனச்செயலுக்கு அந்தச் செயலை செய்து முடித்துவிட்டு அதற்கு ஆதரவாக புதிய ஆதாரத்தை உருவாக்க முயல்கின்றார் ம.ம.கட்சி வாத்தியார்.
அந்த கோவிலை தொல்லியல் துறை கையில் எடுத்தால் நமது பள்ளிவாசலும் பாதிக்கப்படும் என்று தூர(?) நோக்கோடு சிந்திக்கக்கூடிய இந்த மழுமட்டையிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றோம்.
இந்தப் போராட்டத்தில் இல.கணேசனுடன் போஸ் கொடுத்துவிட்டு வந்த பிறகுதான் பள்ளிவாசல் மேல் உங்களுக்கு அக்கறை வந்ததா? பள்ளிவாசல்கள் மேல் இவ்வளவு அக்கறை உள்ளதால்தான், பாபர் மசூதிக்கு சொந்தமான இடத்தை, மூன்றாகப் பிரித்து இடித்தவனுக்கு இரண்டு பங்கும், இழந்தவனுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்ற அலகாபாத் நீதிபதிகளின் கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பை, “அற்புதமான தீர்ப்பு; அதை நாங்கள் வரவேற்கின்றோம்” என்று வரவேற்று அறிக்கை விட்டீர்களா? இதுதான் நீங்கள் பள்ளிவாசல்களை பாதுகாக்கும் லட்சணமா?.
ஒரு கோவிலை தொல்லியல் துறை கையில் எடுத்தால், அதைச் சுற்றியுள்ள பள்ளிவாசல்கள் பாதிக்கப்படும் என்று சட்டம் பேசும் தாங்கள், “இராமேஸ்வரத்தை புனித பூமியாக அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தீர்களே! அப்படி புனித பூமியாக அறிவிக்கப்பட்ட ஊரில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திற்கும் ஆப்பு வைக்கப்படும் என்ற உண்மையை தெரிந்து கொண்டுதானே இந்தக் கோரிக்கையை வைத்தீர்கள். இப்படி பள்ளிவாசல்களுக்கு மூடுவிழா நடத்த அறிக்கை வெளியிட்டு, கோரிக்கை வைத்த தாங்கள்தான் பள்ளிவாசல் நலனிற்காக இல.கணேசனுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினீர்களாக்கும். அற்புதமான(?) விளக்கம் போங்கள்.
புளுகு மன்னனின் புளுகு 3:
“நேரடியாக மேடைக்கு வந்து எனக்கு அருகில் தான் உட்காருவேன் என்று அடம் பிடித்து என் அருகில் அமர்ந்துக் கொண்டார். உடனே பத்திரிகையாளர்கள் அனைவரையும் எழுந்து நின்று புகைப்படம் எடுக்க கைகோர்த்து நிற்கச் சொல்ல மேடையில் இருந்த நெருக்கடியின் காரணமாக நான் நகர முடியாமல் மனதில் பெரும் வருத்தத்துடன் இல. கணேசனுடன் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது” என்று அடுத்த புளுகை அள்ளிவிட்டுள்ளார்.
இவரது புளுகளுக்கு ஓர் அளவே இல்லையா? என்று கேட்கும் அளவுக்கு உள்ளது இந்தப் புளுகு.
“இவர் பக்கத்தில்தான் உட்காருவேன்; இல்லாவிட்டால் நடப்பதே வேறு” என்று சொல்லி இல.கணேசன் அவர்கள் மேடையில் கீழே விழுந்து புரண்டு அழுதது போல அள்ளிவிட்டுள்ளார் வாத்தியார். இல.கணேசனிடம் போய் யார் கேட்கப் போகின்றார்கள் என்ற தைரியத்தில்தான் இவ்வாறு அள்ளிவிட்டுள்ளார் என்பது தெரிகின்றது. அப்படி இல.கணேசன் இவர் பக்கத்தில் உட்கார்ந்தால் இவர் எழுந்து வர வேண்டியது தானே! இந்த ஜனாஸா ஏன் ஆடாமல், அசையாமல் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தது என்பதுதான் நமது கேள்வி.
மேலும், அனைவரும் எழுந்து உற்சாகமாக கைகோர்த்து பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுக்கும் வீடியோ காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த வீடியோவில் இல.கணேசனுடைய கையை பிடித்துக் கொண்டு இவர் விடாததும், இல.கணேசன் இவரது கையை உதறிவிடும் காட்சியும் தெளிவாக ஒளிபரப்பப்பட்டன.


இப்படி இல.கணேசனே இவரது கையை உதறிவிடக்கூடிய அளவிற்கு மானம்கெட்டு நடந்துவிட்டு இடநெருக்கடி காரணமாக வேறுவழியின்றி மனவருத்தத்துடன்தான் அவரோடு கைகோர்த்து போஸ் கொடுத்தேன் என்று இவர் கூறுகின்றார் என்றால் அந்த அளவிற்கு மக்களை மூடர்கள் என்று நம்புகின்றார் போலும்.
இலகணேசன் வருவது முன்கூட்டியே தெரியுமாம்:
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க இல.கணேசன் வருகின்றார் என்பது முன்கூட்டியே வாத்தியாருக்கு தெரிந்திருக்காது போலத்தெரிகின்றது. திடீரென்று இல.கணேசன் வந்தவுடன்தான் இந்த மானங்கெட்ட இழி செயலை வாத்தியார் செய்திருப்பார் போல என்றுதான் நாம் நினைத்தோம்.
ஆனால், வாத்தியார் வெளியிட்ட மறுப்பு அறிக்கைக்குப் பிறகுதான் தெரிகின்றது. இல.கணேசன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றார் என்ற செய்தி முன்கூட்டியே மானத்தை வந்த விலைக்கு அடகு வைத்த வாத்தியாரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. இல.கணேசன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், அப்படி அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டிருந்தும், தொலைக்காட்சியில் நமது முகத்தையும் ஒரு ஓரத்தில் காட்டுவார்களே என்ற நப்பாசையில் இந்தப் போராட்டத்தில் பி.ஜே.பி.யின் இல.கணேசனுடன் உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளார் என்ற உண்மை இவரது அறிக்கை வாயிலாகத் தெரிய வந்துள்ளது.
இஸ்லாத்தை கருவறுக்கத் துடிக்கும் பாசிச கும்பலின் தலைவனோடு எப்படி நீங்கள் கைகோர்த்து நிற்கலாம்?. இது சமுதாய மக்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமில்லையா? என்று நாம் கேட்டால், அதற்கு பதிலளிக்கின்றேன் என்ற பெயரில், “நான் செய்தது சாதாரண துரோகமில்லை; வடிகட்டிய, கடைந்தெடுத்த பச்சைத் துரோகம்” என்று தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது இந்த சட்டமன்ற ஜனாஸா.
ஆக, இல.கணேசனும் தானும் ஒரே மேடையில் அமரப் போகின்றோம் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் இவர் இந்த மேடையில் ஏறியுள்ளார் என்பது இவர் எத்தகைய துரோகி என்பதையும், இவர் எதற்கும் துணிந்த சமுதாய துரோகி என்பதையும் பறைசாற்றுவதாக உள்ளது.
இல.கணேசனுக்கு பதிலாக நரேந்திர மோடி அங்கு வந்திருந்தாலும் அந்த நரபலி மோடியுடனும் இந்த மானம் கெட்ட வாத்தியார் கைகோர்த்து போஸ் கொடுத்து நின்றிருப்பார் என்று நாம் சொன்னது நூறு சதவிகிதம் உண்மைதான் என்பதை இவரது அறிக்கை தெளிவுபடுத்துகின்றதா? இல்லையா?
முஸ்லிம்களின் உரிமையைக் காக்கும் லட்சணம் இதுதானா?:
அப்படி உண்மையிலேயே முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமைக்காக போராடுவதாக இருந்தால் தனியாக ஒரு மேடையைப் போட்டு, போராடித் தொலைக்க வேண்டியது தானே! அதை விட்டு விட்டு, சங்பரிவாரக் கும்பலோடு கைகோர்த்து உங்களை போஸ் கொடுக்கச் சொன்னது யார்?. இப்படி சங்பரிவாரக் கும்பலின் தலைவனோடு சேர்ந்து கைகோர்த்து போஸ் கொடுத்து நிற்பதுதான் முஸ்லிம்களின் உரிமையை நிலைநாட்டி மீட்டெடுக்கும் லட்சணமா? என்று தங்களது மறுப்பு அறிக்கையைப் பார்த்த சிந்தனையாளர்கள் கேள்வியெழுப்புகின்றார்கள்.
முஸ்லிம்களை அடாவடிக்காரர்களாக சித்தரித்து வாத்தியார் ஆற்றிய உரை:
“பிற மக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் மார்க்கம் அல்ல இஸ்லாம் என்பதற்கு சான்றாக கலீபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியின் கீழ் ஜெருசலம் நகரம் முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் வந்த நிலையில் அந்நகரில் கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு அவர்களை அந்நகரின் கிறிஸ்த்தவத் தலைமை குரு சோபோர்னிசிஸ் அந்நகரைச் சுற்றிக் காட்டிய நிகழ்ச்சியையும் ஏசு நாதர் பிறந்ததாக சொல்லப்படும் தேவலாயத்திற்கு (Church of Nativity) சென்று அதனை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் பாங்கு சொல்லப்பட்ட வேளையில் அந்த தேவலாயத்திலேயே தொழுகையை நிறைவேற்றும்படி அந்த பாதிரியார் கேட்டுக் கொள்ள அதனை உமர் ரலி மறுத்ததையும் எடுத்துக் கூறினேன். நான் இங்கு இப்போது தொழுதால் பிற்காலத்தில் முஸ்லிம்கள் இது எங்கள் கலீபா தொழுத இடம் என்று உங்கள் வழிப்பாட்டு உரிமை கோரக்கூடும். அதற்கு நான் வழி வகுக்க விரும்பவில்லை என்று உமர் (ரலி) தொழுவதற்கு மறுப்புத் தெரிவித்ததற்கான காரணத்தை விளக்கி பேசினேன். நான் இந்த கருத்தைத் தெரிவித்த போது போராட்டத்தில் பங்குக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தின் இந்த அற்புதமான சகிப்புத்தனத்தை அங்கீகரிக்கும் வகையில் பெரிய கரகோஷத்துடன் அதனை வரவேற்றனர்” என்று தான் பேசிய பேச்சிற்கு பலத்த கரகோஷம் கிளம்பியதாக பீற்றியுள்ளது இந்த ஜனாஸா.
முதலில்,
இவர் கூறிக்காட்டிய இந்த சம்பவத்திற்கு எந்த ஆதாரத்தையும் இவர் காட்டவில்லை.

இது ஆதாரப்பூர்வமான செய்திதான் என்பதற்கு சரியான சான்றை வாத்தியார் தர வேண்டும்

அடுத்ததாக, இந்த சம்பவம் முஸ்லிம்கள் எல்லாம் அடாவடித்தனம் செய்யக்கூடியவர்கள் என்ற கருத்தை தரக்கூடியதாக உள்ளதா? இல்லையா?

ஒரு கலீபா தொழுத இடம் என்பதற்காக அந்த இடத்தை, அந்த பிறமத வழிபாட்டுத்தலத்தை முஸ்லிம்கள் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவார்கள் என்று சொல்வதாக இருந்தால், அந்த அளவிற்கு முஸ்லிம்கள் என்ன மோசமானவர்களா?

இப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ரீதியில் பேசியதால்தான் இல.கணேசன் உட்பட அனைவரும் பலத்த கரகோஷத்தை எழுப்பினார்கள் போலும்.

மேலும், இந்தச் செய்தி உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அந்தச் செய்தியிலேயே, “தேவாலயத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, பாங்கு சொல்லப்பட்ட வேளையில்” அந்த சம்பவம் நடந்ததாக கதை சொல்லியுள்ளார். அப்படியானால் அருகே பள்ளிவாசல் இருந்திருக்குமேயானால் உமர் (ரலி) அவர்கள் அங்கு சென்றுதானே தொழுகையை நிறைவேற்றியிருப்பார்கள். அதைத்தானே காரணமாகச் சொல்லியிருப்பார்கள்? என்ற சந்தேகமும் எழுகின்றது.

இவரது இந்த உரை இல.கணேசனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று ஆரூடம் சொல்கிறார் வாத்தியார்.

இவரது இந்த உரை இல.கணேசனுக்கு குஷியைத்தான் அதிகப்படுத்தியிருக்கும். ஏனெனில் சங்பரிவாரம் முஸ்லிம்களை அடாவடிக்காரர்களாக சித்தரித்து செய்யும் வேலையை அவர்களது பினாமி செய்து அவர்களது வேலையை இலகுவாக்கி உள்ளது என்றால் அவர்களுக்கு குஷிதானே வரும்.
இவ்வாறு தான் பேசியதுதான் இல.கணேசனுக்கு பதிலடியாம். இதுவா பதிலடி. பதிலடி என்ற பெயரில் இவர் செருப்படியல்லவா வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.
வேலூர் கோட்டை பள்ளிவாசலுக்கு குரல் கொடுத்த மாவீரர்(?):
மேலும் அவர் தனது உரையில்,
இந்திய தொல்லியல் துறை மக்களின் உணர்வுகளை மதிக்காமல் எவ்வாறு செயல்பட்டு வருகின்றது என்பதை விவரிக்கும்போது வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமையை பறித்து இந்திய முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை பறித்த விபரத்தையும் அதனை மீட்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போராடி வரும் வரலாற்றையும் எடுத்துரைத்தேன். இதே போல் மாமல்லபுரத்தில் வழிபாடு இல்லாத கோயில்களை தன்வசப்படுத்தி அவற்றை பாதுகாக்க தவறி வரும் இந்திய தொல்லியல் நிறுவனம், மக்களால் பாதுகாக்கப்பட்டு வழிபாடு நடந்து வரும் தலசயானப் பெருமாள் கோயிலை தமிழக இந்து அறநலத்துறையிடமிருந்து தன் வசப்படுத்தி வழிப்பாட்டு உரிமையை பறிப்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு முரணானது என்பதை சுட்டிக் காட்டினேன்” என்று அள்ளிவிட்டுள்ளார்.
இவர் உண்மையிலேயே துணிச்சலான ஆளாக இருப்பாரேயானால், வேலூரில் உள்ள பள்ளிவாசலில் தொழ அனுமதி வழங்கக்கோரி முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்திய போது, தொழுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சங்பரிவாரக் கும்பல் எதிர்ப்போராட்டம் நடத்தியது. அதைக் கண்டித்து, சங்பரிவாரக் கும்பலின் தலைவர் முன்னிலையில் பேசியிருக்க வேண்டுமா? இல்லையா? அதை விட்டுவிட்டு, அதைக் கண்டிக்கத் திராணியில்லாமல் இருந்துவிட்டு, அதையும் தான் செய்த பெரிய சாதனையாக பீற்றியுள்ளார் இந்த புளுகு மன்னன்.
இந்த இடத்தில் வேலூர் பள்ளிவாசலைப் பற்றி பேசும்போது சங்பரிவாரத்தின் தலைவன் அமர்ந்திருக்கும் மேடையில், முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கக் கூடிய சங்பரிவாரத்தின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுவதற்கு ஏற்ற இடம் அதுதான். அதைவிட்டுவிட்டு மேடையில் அதற்கு ஜால்ரா தட்டிவிட்டு தான் செய்த ஈனச் செயலுக்கு இதை ஆதாரமாகக் காட்டித் திரிகின்றார் இந்த (மா)மாவீரர்(?).
புளுகு மன்னனின் புளுகு 4 :
அடுத்து அவர் அள்ளிவிட்டுள்ள புளுகு அவர்களது கலகக் கண்மணிகளுக்கே சிரிப்பூட்டும் புளுகாகும். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று புதிய அரசு ஆட்சியில் அமைச்சரவை பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு குஜராத் கொடியவன் மோடி வருகிறான் என்று தெரிந்த பிறகு நாம் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை. இதனால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. பா.ஜ.க. என்ற பாசிச கட்சியின் எதிர்ப்பில் நாம் உறுதியாக இருக்கிறோம்.” என்று சொல்லி காமெடி பண்ணியுள்ளார்.
நரபலி மோடி வருவதால்தான் பதவியேற்பு விழாவை ம.ம.கட்சி புறக்கணித்தது என்று இதற்கு முன்னால் இந்த ஜால்ரா மன்னன் எந்த ஒரு இடத்திலும் மூச்சுக் கூட விடவில்லை.
நரபலி மோடி வருவதால்தான் பதவியேற்பு விழாவை ம.ம.கட்சி புறக்கணித்தது என்று கண்டன அறிக்கையாவது வெளியிட்டாரா? இல்லவே இல்லை.

நரபலி மோடியை பதவியேற்பு விழாவிற்கு அழைத்த ஜெயலலிதாவை கண்டித்ததா இந்த ஜனாஸா. இல்லவே இல்லை.
நரபலி மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆளனுப்பி ஆசி வழங்கிய அம்மாவை கண்டித்ததா இந்த புளுகுப் பேர்வழி. இல்லை.
இப்படி அனைத்து விஷயத்திலும் மோடிக்கு எதிராகக் கூட வாய்திறக்க வக்கில்லாத இவர்தான் தான் ரொம்ப கராரான ஆள் என்பது போல பில்டப் கொடுத்து முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றப் பார்க்கின்றார்.

இவ்வளவு அநியாயத்தையும் செய்து விட்டு, “பா.ஜ.க. என்ற பாசிச கட்சியின் எதிர்ப்பில் நாம் உறுதியாக இருக்கிறோம்.” என்ற பில்டப் விட்டதுதான் இருப்பதிலேயே ஹைலைட் காமெடி.
நல்ல பிள்ளை நாடகம்:
அள்ளிவிடும் புளுகு மூட்டைகளையெல்லாம் அள்ளிவிட்டு, அவிழ்த்துவிட வேண்டியவையெல்லாம் அவிழ்த்துவிட்டுவிட்டு கடைசியாக இவர் முடிக்கும் வார்த்தைகள் இவர் எப்படிப்பட்ட ஆள் என்பதை தெளிவாக்குகின்றது.

இவ்வளவு பதிலையும் மறுப்பு அறிக்கை என்ற ரீதியில் கொடுத்துவிட்டு, “நான் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதை வைத்து கடும் விமர்சனத்தை சிலர் இப்போது செய்து வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் நாம் பதில் சொல்ல வேண்டியது நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்விடம் தான்.; செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுதமொழிக்கேற்ப தான் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். நான் அந்த நிகழ்ச்சியில் எந்த எண்ணத்துடன் பங்கு கொண்டேன் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்.” என்று இவர் கூறியுள்ளதுதான் இவர் எத்தகைய நாடக நடிகர் என்பதை படம்பிடித்துக் காட்டுகின்றது.
இத்தனை பக்கத்திற்கு பதில் சொல்லிவிட்டு, நான் யாருக்கும் பதில் சொல்ல அவசியமில்லை என்று இவர் உளறுவதே இவர் போடும் வேஷத்தை வெளிப்படுத்திவிட்டது.

இவர் ஆதாரமில்லாத உமர் (ரலி) விஷயத்தை உதாரணமாகக் கூறியதால், நாம் இவருக்கு உரைக்கும் வகையில் ஆதாரப்பூர்வமான அலி(ரலி) அவர்களது உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டுகின்றோம்.
அலி (ரலி) அவர்களை எதிர்க்க களம்கண்ட காரிஜியாக்கள் இப்படித்தான் “அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்ற திருமறை வசனத்தை சொல்லிக் கொண்டு அவர்களுக்கு எதிராக போர்புரிய வந்தனர். அப்போது அலி(ரலி) அவர்கள் சொன்ன விஷயத்தையே நாம் வாத்தியாருக்கு பதிலாகக் கூறிக் கொள்கின்றோம்.
“அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்ற திருமறை வசனத்தை காரிஜியாக்கள் சொல்லிய போது “தவறான இடத்தில் பயன்படுத்தப்பட்ட சரியான வார்த்தை” என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்களே, அதுபோலத்தான் வாத்தியார் வாயிலிருந்து வரும் இந்த வார்த்தையும் அமைந்துள்ளது.
நாம் பதில் சொல்ல வேண்டியது நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்விடம்தான் என்று இவர் சொல்வாரேயானால் பிறகு ஏன் இங்கு விளக்கம் கொடுக்கின்றார். பொது வாழ்க்கையில் வந்துவிட்டால் பொதுமக்கள் கேட்கக்கூடிய கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். அதைவிடுத்து விட்டு, திருடிய திருடன் கையும் களவுமாக பிடிக்கப்பட்டவுடன் போலீசாரிடத்தில் விசாரணையின் போது நான் உங்களுக்கெல்லாம் பதில் சொல்லத்தேவையில்லை “நான் பதில் சொல்ல வேண்டியது நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்விடம் தான்.” என்று சொன்னால் அது எப்படி இருக்குமோ அதுபோலத்தான் வாத்தியார் வைக்கும் வாதமும் உள்ளது. கையும் களவுமாக பிடிபட்ட திருடனைப் போலத்தான் வாத்தியார் இப்போது விழிபிதுங்கி நிற்கின்றார்.
அடுத்து தான் செய்த இழி செயலுக்கு வாத்தியார் காட்டும் அடுத்த நபிமொழி, “செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன.” மேற்கண்ட நபிமொழியையும் தனது தவறுக்கு ஆதாரமாக்கப் பார்க்கின்றார். “செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன” என்ற நபிமொழி நல்ல செயல்களை செய்துவிட்டு அதற்கு அல்லாஹ் தகுந்த கூலியை எப்போது வழங்குவான் என்றால் எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் வழங்குவான் என்பதற்காக சொல்லப்பட்டது.
ஒருவன் விபச்சாரியிடத்தில் சென்று விபச்சாரம் செய்துவிட்டு, அவளுக்கு கணவன் இல்லாத காரணத்தால், அவளுடைய உள்ளம் நொந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், அவளது உணர்வுகளுக்கு வடிகால் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில்தான் நான் அவளிடம் விபச்சாரம் செய்தேன். எனது எண்ணம் தூய எண்ணம். “செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன” என்று ஒருவன் சொன்னால் எப்படி இருக்குமோ அதுபோலத்தான் வாத்தியாரின் இந்த உதாரணம் உள்ளது. கேடுகெட்டவர்களுடன் கைகோர்த்து நின்று ஈனச் செயல் புரிந்துவிட்டு “செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன” என்று தனது இழிசெயலுக்கு நபிகளாரின் பொன்மொழியை இவர் ஆதாரம் காட்டுகின்றார் என்றால் இவரை என்னவென்பது?
மானம் என்பது கிலோ எவ்வளவு? அது எந்தக் கடையில் கிடைக்கும்?:
மானம் என்பது கிலோ எவ்வளவு? அது எந்தக் கடையில் கிடைக்கும்? என்று வாத்தியார் கேட்பார் என்பதை உண்மைப்படுத்தும் வகையில்தான் அந்த மானங்கெட்ட மறுப்பு அறிக்கை உள்ளது என்பதை அந்த அறிக்கையை படிக்கக் கூடியவர்கள் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
இப்படி மறுப்பு அறிக்கைவிட வைத்து, தங்களது அறிக்கையாலேயே தாங்கள் கேவலப்படும் நிலையை ஏற்படுத்தி இவர்களது துரோகத்தை சமுதாய மக்களுக்கு வெட்டவெளிச்சமாக்கிக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!

Friday, July 6, 2012

இஸ்லாமிய குற்றவியலை கேவலப்படுத்தும் தமுமுக வும், ஜவாஹிருல்லாஹ்வும்


இஸ்லாமிய குற்றவியலை கேவலப்படுத்தும் தமுமுக வும்ஜவாஹிருல்லாஹ்வும். – மரண தண்டனையை இல்லாமலாக்க போராடும் வாத்தியார்!
கடந்த 02ம் தேதி சென்னை சாந்தோம் மேல் நிலைப்பள்ளியில் மரண தண்டனை எதிர்ப்பு மாநாடுஎன்ற ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது.

அரசியல்வாதிகள் உற்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நமது மானசீக தலைவர் (?) ஜால்ரா மன்னர் ஜவாஹிருல்லாஹ்வும் கலந்து கொண்டார்.
மரண தண்டனையை எதிர்த்து நடத்தப்பட்ட இந்தமாநாட்டில் பேராசிரியரும் கலந்து கொண்டு மரண தண்டனையைத் தடுக்கப் பாடுபடுகின்றார். ஒரு பக்கம் ஜெயலதிதாவுக்கு ஜால்ரா. மறுபக்கம் சமுதாயத்திற்கு துரோகம்இதைத் தாண்டி சாமியார்களிடம் ஆசி வாங்குதல்ஜெப சீடி க்களை வெளியிடுதல். நடிகன் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி அழகு பார்த்தல்,மவ்லிது கூட்டங்களுக்கு போஸ்டர் அடித்து கலந்து கொள்ளுதல்நடிகர் ரசிகர் மன்றங்களுடன் ஜால்ரா என்று இது வரைக்கும் இவர்கள் செய்யாதஅயோக்கியத்தனங்கள் இல்லை.
இப்போது இவர்கள் கையில் எடுத்திருக்கும் செயல்பாடு மார்க்கத்தின் சட்ட மூலத்தையே கேள்விக் குறியாக்கி,கேவலப்படுத்திஉலகமே போற்றும் இஸ்லாமிய மார்க்கத்தின் குற்றவியல் தண்டணையைகேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தீவிரவாதிகளான விடுதலைப் புலிகள் அமைப்பினால் இந்திய நாட்டின் பிரதமர் ராஜுவ்காந்தி கொலை செய்யப்பட்டார். ராஜுவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மரண தண்டனை நிறைவேற்றும் நிலை இருந்துவருகின்றது.
தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களை காப்பாற்றஅதிலும் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற வைக்கோ போன்றவர்கள் எடுத்துக் கொண்ட முக மூடிதான் மரண தண்டனை எதிர்ப்புக் கோஷம்.
ஒரு பக்கம் தீவிரவாதத்திற்கு எதிராக பேசுவதாகவும்,பிரச்சாரம் செய்வதாகவும் நடித்துக் கொண்டிருக்கும்ஜவாஹிருல்லாஹ்வைக்கோ போன்ற சைக்கோக்கள் கொலைகொள்ளைகுண்டு வைப்புதீவிரவாதம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மறுபக்கம் வெற்றுக் கூச்சல் போடுகின்றார்கள்.
பாதிக்கப்பட்டவனின் இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டியவர்கள் கருணை மனு என்ற பெயரில் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும் என்று கூச்சலிடுகின்றார்கள். வைக்கோவின் உடன் பிறப்புகள் அல்லது சொந்தக் காரர்கள் அல்லது ஜவாஹிருல்லாஹ்வின் சொந்தங்கள் யாராவது கொலை செய்யப்பட்டால் அல்லது குண்டு வெடிப்புக்களில் சிக்கி உயிரிழந்திருந்தால் அவர்களை இவர்கள் மண்ணிக்க வேண்டும் என்று பொதுக் கூட்டம் போடுவார்களாமாநாடுகள் நடத்துவார்களா?மேடைகளில் முழங்குவார்களா?
மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன்?
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு இதழில் எழுதப்பட்ட தலையங்கத்தை சில மாற்றங்களுடன் இங்கு வெளியிடுகின்றோம்.
தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் (?) ஜவாஹிருல்லாஹ் போன்ற ஜால்ரா வாதிகள் போராடிவரும் வேளையில்,தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கூடாது என்றுஓய்வு பெற்றுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி லகோதி சொல்லியுள்ளார். இதை ஒரு கருத்தாக மட்டும் சொல்லாமல் அதற்குத் தேவையான வாதங்களையும் அடுக்கடுக்காய் வைத்துள்ளார் லகோதி.
தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகளில் எத்தனையோ அப்பாவிகள் உயிரிழந்து இருக்கின்றனர். அந்த அப்பாவி மக்களுக்கு இந்தத் தீவிரவாதிகளால் உயிர் கொடுக்க முடியுமாகொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மறந்து விட்டு தண்டனை பெறப்போகும் ஒரு நபரைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்கும் நிலை உள்ளது” என்று கூறி தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் மனித உரிமை அமைப்புகளுக்கு விடையளிக்க முடியாத வினாவை எழுப்பியுள்ளார் லகோதி.
ஒரு குற்றவாளியைத் தூக்கில் போட்டு விடலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமா?”என்று சிலர் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை அவனை தீவிரவாதச் செயலுக்குத் தூண்டிவிடும்நபரைப் பார்த்து கேட்க வேண்டும் என்றார் லகோதி. தூக்குத் தண்டனைக் கைதிக்கு ஆதரவாக கருணை மனுபோடும் கண்ணியவான்கள் இந்தக் கேள்வியில் உள்ள அர்த்தத்தை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.
ஒருவன் பத்துப்பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர்மாமனோ மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்குஅளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையை சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறதுஒருவன்மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால்,அதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.
அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியைமன்னித்து விட்டால் குற்றாவளி தண்டிக்கப்பட மாட்டார். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரி பெற்றுக் கொண்டாலும் குற்றவாளிதண்டிக்கப்பட மாட்டார்.
அது போலவே கொல்லவப்பட்டவரின் வாரிசுகளில்யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.
அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.
சட்டங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.
கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும்சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின்உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.
இந்த நிலைமைக்கு என்ன காரணம்கொலையாளியைஇந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியகாரணமாக உள்ளது எனலாம்.
ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டச் சொல்லி சிலர் வேண்டியுள்ளனர். அதுபோல் பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயல் புரிந்து மாட்டிக் கொண்ட ஒரு இந்தியரைத் தூக்கில் போட வேண்டாம் என்று இந்திய அரசே கருணை மனு போட்டுள்ளது. குறிப்பாக பி.ஜே.பி தலைவர் அத்வானி போன்றவர்கள் இதற்காகபடுபிரயத்தனம் எடுத்துக் கொண்டார்கள்.
பாராளுமன்றத் தாக்குதலுக்கு உதவி புரிந்ததாக பேராசிரியர் ஜீலானி கைது செய்யப்பட்டவுடன்,அப்படிப்பட்டவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று கர்ஜித்த இந்தப் புண்ணியவான்கள்(!) பாகிஸ்தான் நீதி மன்றத்தால் தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்ட ராஜேந்தர் சிங்குக்கு தூக்கு கூடாது என்கிறார்கள்.
இவ்வாறு நாட்டுக்கு நாடு ஒரு நீதி. இனத்துக்கு ஒரு நியாயம் பேசும் அத்வானி வகையறா – லகோதியின் கருத்தைக் கேட்டாவது திருந்த வேண்டும்.
தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்த கன்றுக்காக தனது மகனையே பலி கொடுத்த மன்னனை மனுநீதிச் சோழன் என்று போற்றுகிறார்கள். ஆனால்இறந்து போன பசுவின் தோலை உரித்தெடுத்த தலித் மக்களை ஹரியானாவில் கொன்று குவித்த சண்டாளர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். ஆனால் ஒரு மனிதனைக் கொன்ற கொலையாளிக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.
கொலையாளியை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தூக்குத்தண்டனை கூடாது என்றுசொல்பவர்கள் கொலை செய்யப்பட்டவரையும்அவரது குடும்பத்தாரையும் கவனத்தில் கொள்ளட்டும். கொலையாளியைக் கொல்வதின் மூலம் அப்பாவி மக்களின் உயிர் பாதுகாக்கப்படுகிறது என்கிறது இஸ்லாம். இந்தக் கருத்தை தனது பாணியில் உரக்கச் சொன்ன லகோதி உண்மையில் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள்இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ – இதைக் கவனத்தில் கொள்கிறது.
அறிவுடையோரேபழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில்உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால்கொலை செய்வதிலிருந்துவிலகிக் கொள்வீராக! (அல்குர்ஆன் 2:179)
மார்க்கத்திற்கு விரோதமாக நடப்பதுடன் மார்க்க செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்கி இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை கேவலப்படுத்தும் தமுமுக மற்றும் ஜவாஹிருல்லாஹ் வகையராக்களை சமுதாய சொந்தங்கள் அடையாளம் கண்டு கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.

Tuesday, April 12, 2011

அரசியல் போதையில் அல்லாஹ் வை மறந்த ஜவாஹிருல்லாஹ்! – கூட்டனி கட்சி தலைவர்கள் முன்பு இன்ஷா அல்லாஹ் வார்தையை மென்டுமுழுங்கி பாதியாக்கிய அவலம்!

கோவை பொதுக்கூட்டத்தில் அதிமுக குண்டர்கள் வெறியாட்டம் – விளக்கு பிடித்து ஆள்காட்டிய மமக SDPI தொண்டர்கள்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹமத்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா, திமுக கூட்டணியை TNTJ ஆதரிப்பது ஏன் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 9.45 மணியளவில் திடீரென அந்தக் கூட்டத்திற்குள் உருட்டுக்கட்டைகள் மற்றும் கற்களுடன் புகுந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த பெரிய ஸ்பீக்கரை கூட்டத்தினர் மீது பிடித்து தள்ள கூட்டத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

என்னவென்று சுதாரிப்பதற்குள் SDPI வேட்பாளர் உமர் தலைமையில் அங்கு வந்த மமகவின் பொருப்பாளர்கள் அங்கிருந்த விளக்குகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நேரத்தில் அதிமுக குண்டர்கள் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் வயரைப் பிடுங்கி விட அந்த இடமே இருளில் மூழ்கியது.

மேடைக்கு முன்னாள் திரண்டிருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த கலவர சூழ்நிலையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பெண்களையும் குழண்ட்தைகளையும் சுற்றி அரணாக நிற்க அவர்கள் மீது பிளாஸ்டிக் சேர்களை தூக்கி அடித்து விட்டு பெண்கள் கூட்டத்திற்குள் நுழைந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த இஸ்லாமிய பெண்களை வெளியே சொல்ல முடியாத கொச்சை வார்த்தைகளால் திட்டி அவர்கள் மீதும் சேர்களைத் தூக்கி அடிக்க, பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர்.

ஆனால் மாற்றானின் இந்த வேலைகளையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாத மமக மற்றும் எஸ்டிபிஐ ரவுடிகள் அவனை அடி, இவனை அடி என ஒவ்வொருவர் மீதும் செல்போனின் விளக்கைப் பிடித்து காட்ட அவர்கள் காட்டிய ஒவ்வொருவர் மீதும் அதிமுக குண்டர்கள் வெறித்தனமான தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர்.

”மேடையில் உள்ளவன்களையும் அடியுங்கள்” என மமகவினருக்கு அதிமுக குண்டர்கள் உத்தரவிட அங்கே திரண்டிருந்த மமக SDPI ரவுடிகள் மேடையை நோக்கி சராமாரியாக கற்களை வீச ஆரம்பிக்க, மேடையின் மீது இருந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மாலை மலர் செய்தி




தமிழ் முரசு



ஆனால் என்ன நிகழ்ந்தாலும் மேடையை விட்டு இறங்க மாட்டோம் என உறுதியாக நின்ற நிர்வாகிகள் இரத்தம் சொட்ட சொட்ட மேடையிலேயே நின்றனர்.பெண்கள் அங்குமிங்கும் ஓடியதில் சில பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

ஆனால் பெண்களையும் குழந்தைகளையும் கூட பார்க்காமல் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அதிமுக குண்டகளின் செயலை, ஏவிவிட்ட நாய்களைப் போல அமைதிகாத்து தங்களின் எஜமான விசுவாசத்தைக் காட்டியது மமக.

தவ்ஹீத் ஜமாஅத்தின் திமுக ஆதரவு நிலையால் பெரும்பாண்மை முஸ்லீம்களின் வாக்கு திமுகவுக்கு மாறி திமுக கூட்டணி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருவதால் வெறுப்படைந்த அதிமுகவினர் இவர்களின் பிரச்சாரத்தை கெடுத்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்த வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளனர்.

ஆனால் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது மதப்பிரச்சனையாக மாறி விடும் என பயந்த அதிமுகவினர், அவர்களின் இன்றைய அடிமைகளான மம கட்சியை ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவழைத்து, முஸ்லிம்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற அதிமுகவின் திட்டத்தை சொல்லினர்.

எஜமானனின் திட்டத்தில் இஸ்லாமியனின் உயிர் போனாலும் பரவாயில்லை என்ற பாணியில் இதை ஏற்றுக்கொண்டு தங்களின் எஜமானிய விசுவாசத்தைக் காட்ட எத்தனித்த மம கட்சியினர் ஏற்கனவே தவ்ஹீத் ஜமாஅத் மீது வெறியில் இருந்த SDPI காரர்க்ளையும் இணைத்துக்கொள்ளலாம் என அவர்களின் யோசனையைச் சொல்ல இதை முழுமையாக ஒப்புக்கொண்ட அதிமுகவினர், அடுத்த கட்ட திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தார்கள்.

அதாவது பொதுக்கூட்டம் நடந்த சாரமேடு மெயின் ரோடு பகுதியில் இருந்த 6 க்கும் மேற்பட்ட சந்துகளில் அதிமுகவின் குண்டர்கள் குவிக்கப்பட்டனர்.

அவர்கள் ஏற்கனவே கடும் போதையில் இருந்ததால் அவர்களுக்கு கொலைவெறி இன்னும் அதிகமாகவே இருந்தது.

அதிமுகவினர் சந்துகளில் குவிக்கப்பட அதன் அடுத்த சாலையில் SDPI யும் மமகவினரும் தங்கள் வாகனங்களில் தயாராய் இருந்தார்கள்.

கூட்டம் முடியும் நேரத்தில் உள்ளே புகுந்து அதிமுக குண்டர்கள் முதல் தாக்குதல் நடத்த துவங்க, பின்னர் செல்போன் லைட்டின் உதவியால் ஒவ்வொரு கிளை நிர்வாகியாக அடையாளம் காட்டப்பட்டு அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

அத்தோடு மேடையை நோக்கி குண்டர்கள் வீசிய கற்கள் மேடைக்கு முன்னாள் கூடியிருந்த பெண்களின் பகுதியில் வந்து விழுந்தன. ஆனால் நல்லவேளையாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் வல்ல இறைவன் காத்துவிட்டான். முஸ்லிம்கள் மீது நடந்த தாக்குதல்களை விளக்கு பிடித்து ஆள்காட்டி முன்னின்று நடத்திய மமகவோ, SDPI யோ அங்கே பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை.

இவர்கள் கூட்டங்களுக்கு இனி பெண்கள் வரக்கூடாது என்பதற்காகவே மாற்றார்கள் நடத்திய வெறியாட்டத்தை கொஞ்சமும் தடுக்காமல் தன் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தியது மமக.

காவல்துறைக்கு புகார் அளித்தும் உடனடியாக யாருமே வராததாலும், நம் ஜமாஅத்தின் உறுப்பினர்கள், பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற என்னத்தில் அமைதி காத்ததாலும் அதிமுக,மமக, SDPI யின் வன்முறை வெறியாட்டம் இரவு 11 மணி வரை நீடித்தது.

இரவு 11 மணிக்கு மேல் தன் படையினருடன் வந்த கமிஷ்னர் சைலேந்திர பாபுவிடம் 25 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

அதிலே 11 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து நம் மக்கள் கலைந்து சென்றனர்.

கோவையில் அதிமுக தனியாக போட்டியிடுகிறது. அவர்களுக்கு மமக ஆதரவு அளிக்கிறது. அவர்களை எதிர்த்து எஸ்டிபிஐ போட்டியிடுகிறது. ஆனால் இவர்களின் எதிர்ப்பையெல்லாம் மறந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தாக்க வேண்டும் என்ற விசயத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

அதிமுக பாஜகவின் ஊதுகுழல் என்று சொல்லி வந்த மமக இன்றைக்கு ஏகத்துவததை அழிக்க அதிமுகவோடும், எஸ்டிபியுடனும் கூட்டணி சேர்ந்திருக்கின்றனர்.

நம் சமுதாய ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு விளக்கு பிடித்து வழிகாட்டிய இந்த மமகவினரா நம் சமுதாய நலனை காக்கப் போகிறார்கள். சிந்தியுங்கள் இஸ்லாமிய சமுகமே! இவர்களை முழுமையாக புறக்கணித்து இவர்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

பா.ஜ.கவின் பினாமி தான் ஜெயலலிதா - தமுமுக தலைவர் டெஹல்காவுக்கு அளித்த பேட்டி

தமுமுக கிளைகள் கலைக்கப் படுகின்றன. 2








ஏகனின் திருப்பெயரால்...


எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன, எத்தனையோ அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கென்று ஒரு அமைப்பு இல்லை. முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கேட்பாரின்றி வேதனைப்படுகிறார்கள். ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் நாம் ஒன்றிணைய வேண்டும், அதற்கு என்னவழி என யோசித்த தமுமுகவின் முன்னாள் நிர்வாகிகள், குணங்குடி ஹனீஃபா வைத்திருந்த 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்' எனும் பெயரை தூசி தட்டி எடுத்து அதை வீரியப்படுத்தி முஸ்லிம்களை ஒன்றிணைத்தனர். அதன் காரணமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறையத் தொடங்கின.


அதன் அமைப்பு நிர்ணய சட்டம்(பைலா)வில் பிரிவு(எ) ஆகிய 'கழகம் அரசியல் கட்சி சார்பற்றதாகவே செயல்படும். எந்த காலத்திலும் நாடாளுமன்ற, சட்டமன்ற, நகராட்சி, ஊராட்சி ஆகிய தேர்தல்களில் போட்டியிடாது' என்ற விதியின் படி பணிகளை செய்து கொண்டிருந்தது.




அதனுடைய பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் நாங்கள் பதவி ஆசைக்காகவோ, பணத்திற்காகவோ இந்த அமைப்பை நடத்தவில்லை, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் ஒருபோதும் தேர்தலில் நிற்கமாட்டோம்' என்று அனைத்து மேடைகளிலும் முழங்கினர்.




மக்களும் அதை நம்பி அணி திரண்டனர். நாளடைவில் அதன் தற்போதைய நிர்வாகிகளுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டபோது இந்த அமைப்பை கட்டிக்காத்த பீ.ஜே, பாக்கர் உட்பட பலரை வெளியேற்ற திட்டமிட்டு தவ்ஹீத் பிரச்சாரத்தால் கப்ரு வணங்கிகள், தரீக்காவாதிகள், ஓதி பார்த்து பிழைப்பு நடத்தும் முஸ்லிம் பூசாரிகள், மரம், மட்டையை வணங்கும் முஸ்லிம்கள்(?!) எல்லோரும் தமுமுகவில் இணைய மறுக்கின்றனர் என்று கூறி தவ்ஹீத்வாதிகளை வெளியேற்றிவிட்டு தமுமுக எனும் இயக்கத்தை தற்போதைய நிர்வாகிகள் அபகரித்தனர். இவ்வாறு தவ்ஹீத்வாதிகளால் உருவாக்கப்பட்ட இயக்கத்தையும் இடத்தையும் அபகரித்துவிட்டு அதிலிருந்து தவ்ஹீத்வாதிகள் துரத்தப்பட்டனர். ஒருங்கிணைக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை குரங்குகளின் கையில் அகப்பட்ட பூமாலை போலானது.
அந்த சூழ்நிலையில் கூட இவர்கள் அரசியல் ஆசையை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.


2005 ஜூன் மாதத்தில் மக்கள் உரிமையில் வந்த ஒரு கேள்வி பதிலை பாருங்கள்.


உமர் அலி, மஞ்சக்கொல்லை


?தமுமுக, முஸ்லீம் லீக், தேசிய லீக் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு கூட்டணியில் இணைந்து அதிக இடங்களை பெற்று தேர்தலை சந்தித்தால் என்ன?!


முஸ்லிம் லீகும் தேசிய லீகும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள். தமுமுக தேர்தலில் போட்டியிடாத சமுதாய இயக்கம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.அந்த இரு லீக்குகளும் குறைந்த பட்சம் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக செயல்பட முன்வந்தால், அவர்கள் இருவரையும் தமுமுக வழிநடத்தி அதிகமான தொகுதிகளை அக்கட்சிகளுக்கு பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யும்.இதனால் நமது வாக்குகள் சிதறாத நிலை ஏற்படும். அதிகமான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களாக உருவாகும் சூழலும் ஏற்படும். இதை இரண்டு லீக்குகளும் பரந்த மனதோடு சிந்திக்க வேண்டும்.
மக்கள் உரிமை மே 27 – ஜூன் 02, 2005 பக்கம் 14


அது மட்டுமின்றி 2006 –ல் கோவையில் நடந்த செயற்குழுவில் தமுமுக தேர்தலில் போட்டியிடாது என்று தீர்மானமாகவும் கொண்டுவந்தார்கள்.
பார்க்க மக்கள் உரிமை செப்டம்பர் 22 – 28, 2006 பக்கம் 1,2,14



அமைப்பின் கட்டுக்கோப்பை மீறினால் எதிர்காலத்தில் தமுமுக நிர்வாகியாகும் வாய்ப்பை இழந்து விட நேரிடும் என அறிவிப்பு செய்கிறார் ஹைதர் அலி.

இது அவருக்கு பொருந்தாதோ?

அதற்கு அடுத்த மாதம் தமுமுகவின் விதியை மீறி தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கடலாடி ஒன்றிய செயலாளர் பாஹிர் அலியை பொறுப்பில் இருந்து நீக்கி சிக்கல் நகர நிர்வாகத்தையும் கலைத்தது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், சோதுகுடி கிளை தலைவரான அஹமது ஜலால் மற்றும் கீழாயூர் கிளை நிர்வாகி கனி ஆகியோரையும் பதவியிலிருந்து நீக்கியது.



இவ்வாறு செய்தவர்கள் திடீரென தங்களுடைய அரசியல் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தனர். அன்று அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் தேர்தலில் ஒரு போதும் போட்டியிட மாட்டோம்' என்றவர்கள் அதற்காக திட்டமிட ஆரம்பித்தனர். பின்னர் திமுகவிற்கு ஆதரவளித்து திமுகவால் முஸ்லிம் சமுதாயம் பாதிக்கப்பட்ட போது கூட சமுதாயத்தின் முதுகில் குத்தி திமுகவிற்கு வெண்சாமரம் வீசி, அதனால் வக்பு வாரியம் கிடைக்கப்பெற்று அதில் சுகம் கண்ட இவர்கள் பதவிகளுக்காக பறக்க ஆரம்பித்தனர்.


முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அனைத்து சமுதாயத்தவருக்கும் எனில் ஏற்கனவே பல கட்சிகளும் பல அமைப்புகளும் இருக்கின்றன. அனைவருக்காகவும் ஒரு அமைப்பு எனில் ஒரு முஸ்லிம் கூட இந்த அமைப்பில் இணைந்திருக்கமாட்டான். முஸ்லிம்களை வைத்து உயர்ந்து விட்டு இன்று அந்த முஸ்லிம்களையே எட்டி உதைக்கின்றனர். முஸ்லிம்களை மட்டும் வைத்திருப்பதால் நாம் பதவிக்கு வரமுடியாது என நினைத்த இவர்கள் மற்றவர்களையும் இணைக்க துவங்கினர். எனவே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு 'மக்கள் முன்னேற்ற கழகம்' என பெயர் சூட்டினர். அதுவும் பெயர் மாறி 'மனித நேய மக்கள் கட்சி' என்று தற்போது உலா வருகிறது.


அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மீறியவர்கள் எதற்கும் துணிவார்கள். அரசியல் லாபத்திற்காக சமுதாயத்தை விற்றவர்கள் இன்று திமுக, அதிமுக, சரத்குமாரின் சமுக, பாஜக என தாவித்தாவி சென்றபோதும் அனைவராலும் துரத்தி அடிக்கப்பட்டு வேறு வழியின்றி தனித்து நிற்கும் நிர்கதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேரத்திற்கொரு வாக்கு, நாளுக்கொரு பேச்சு பேசும் இவர்களைவிட பிற அரசியல் கட்சிகள் மேல் என தமுமுகவின் நிர்வாகிகள் கூண்டோடு விலகி வருகின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை தலைவரான அன்வர் பாட்ஷா மற்றும் கரீம், உசேன், ஷபீ, சாவேஸ் உட்பட பலர் தமுமுகவிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து யூனுஸ்கானுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர்.


பார்க்க படம் :


இது தொடக்கம் மட்டுமே!

அரசியலும் இஸ்லாமிய இயக்கங்களும்






ஏகனின் திருப்பெயரால்...


ஜாக் : தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், அடிக்கடி ஒற்றுமை பிரசுரம் வெளியிடுவார்கள். இவர்களைவிட்டு பிரிந்த அனைவரும் பாவிகள் என்று ஃபத்வா கொடுத்தார்கள். ஜாக் அமைப்பை சாராதவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று நோட்டீஸ் அடித்தார்கள். (தேவைப்படுவோருக்கு ஆதாரம் தரப்படும்.) நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இந்த காலத்திற்கு பொருந்தாது என்று பொதுமேடையில் பகிரங்கமாகவே சொன்னார்கள், சொல்கிறார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவதாகவும் சொல்வார்கள். ததஜவினர் சந்தணத்தை பூசிக்கொண்டால், அவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சாக்கடையை தங்கள் மேல் பூசிக்கொள்வார்கள்.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸை ஆதரித்து 15-04-200 6 15-04-2006 அன்று ஜாக்கின் மாநில செயலாளர் மற்றும் பிரச்சார பீரங்கியான கோவை அய்யூப் கடையநல்லுரில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார்.




ஏப்ரல் மாதத்தில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ததஜ அதிமுகவை ஆதரித்ததால் மே மாதம் அந்தர்பலடி அடிக்கிறார் கமாலுதீன்.


'நம்முடைய பேச்சு, உயிர் மூச்சு தவ்ஹீத்! தவ்ஹீத். தவ்ஹீத் தவிர வேறல்ல. அரசியல்வாதிகளுக்கு ஆள்பிடிக்கும் மாயாஜாலப்பேச்சு, அது எவர் வாயிலிருந்து வந்தாலும் அவரை இனம் காண்போம், தனிமை படுத்துவோம். இணைவைக்கும் அரசியல்வாதிகளுக்காக எந்த ஏகத்துவவாதியையும் நாம் இழந்துவிடக் கூடாது'. – அல்ஜன்னத், மே-2006 20பக்கம் 20 என்று எழுதுகிறார்கள்.

பீ.ஜே யை திட்டுகிறோம் என நினைத்துக் கொண்டு சாக்கடை குளியல் நடத்தினார்கள்.

தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் எங்கே நம்மை கொண்டு போய் தள்ளப் போகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். அல்ஜன்னத், மே 2006, பக்கம் 48


நம்மை பொறுத்தவரை அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட அனைவரும் சமமே. அது மூன்றெழுத்து அரசியல்வாதியாயினும் சரிதான். நான்கெழுத்து அரசியல்வாதி யாயினும் சரிதான். அல் ஜன்னத் மே 2006 2006 பக்கம் 50

ஆனால் ஏகத்துவவாதிகளோ(?) இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்று துடிக்கிறார்கள்.

பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி

சே! சாக்கடை நாறுகிறது! - அல் ஜன்னத் மே 2006 பக்கம் 51



இவ்வாறு எழுதியவர்கள் பித்னாவில் ஆஸ்கார் விருதுபெற்ற பஸிலுல் இலாஹியை வேட்பாளராக நியமிக்கவேண்டுமென்று கோரி நடுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பார்க்க படம்


அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் ஜாக்கின் துணை செயலாளரான ஏர்வாடி சிராஜ் தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்று இன்றும் உள்ளாட்சி பதவியில் இருக்கிறார்.

இவ்வாறு நயவஞ்சக வேடமிடும் இந்த போலிதவ்ஹீத்வாதிகளை நாம் சட்டைசெய்ய வேண்டியதில்லை.


மனித நீதி பாசறை :


ஆர்ப்பாட்டம் கூடாது, போராட்டம் கூடாது, கொடி கூடாது, ஜனநாயகம் கூடாது, அபுஜஹல் தாக்க வந்த போது நபி(ஸல்)அவர்கள் கொடிபிடித்துக் கொண்டா இருந்தார்கள் என்றெல்லாம் மற்றவர்களை நக்கலடித்தவர்கள் இன்று கொடி, ஆர்ப்பாட்டம் என்று தங்களை மாற்றி 'அதிகாரம் மக்களுக்கே' எனும் கோஷத்துடன் வாக்களிக்கவும் இரவல் கட்சிக்காக பிரச்சாரம் செய்யவும் தயாராகிவிட்டார்கள். விடியல், மனித நீதி பாசறை, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என பல பெயர்களில் இவர்கள் உலா வந்தாலும் இவர்களால் முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைக்கப்படவில்லை. எனவே இதையும் விட்டுவிடுவோம்.

ஜமாஅத்தே இஸ்லாமி : எம்.என்.பி யின் கொள்கையில் முக்கால் பாகத்தைக் கொண்டிருக்கும் இவர்களும் பிற மாநிலங்களில் கொடிபிடித்து அரசியல் அதிகாரத்திலும் ஈடுபடுகிறார்கள். ஒயிட் காலர் மற்றும் வி.ஐ.பிக்களுக்கு மட்டும் என தேர்ந்தெடுத்து அழைப்புபணி செய்வதால் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இவர்களால் சமுதாயத்திற்கு சாதக பாதகம் எதுவுமில்லை.

முஸ்லிம் லீக் :

அரசியலில் தனித்தன்மை இல்லாததால் இருப்பவனையும் இறந்தவனையும் வணங்கிக்கொண்டு மிகப்பெரிய இணைவைப்பை செய்து கொண்டிருக்கின்றனர். பதவிக்காக செயல்படும் இந்த பெயர்தாங்கி முஸ்லிம்களால் சமுதாயத்துக்கு எந்த நன்னையும் இல்லை.
பார்க்க : படம்

ஆனால் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் இரு இயக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்விரு இயக்கங்களும் சமுதாயத்திற்கு செய்த, செய்கின்ற நன்மைகள் என்ன? சமுதாயத்தின் பெயரைக்கூறி சமுதாய மக்களை எவ்வாறு வஞ்சித்தன, துரோகம் செய்தன என்பதை நாம் அடுத்ததாக காண்போம்.